ஓடிடி - டிக்கெட் கட்டணம்: திரையரங்குகள் காலியாக இருக்க உண்மையான காரணம் என்ன?
ஓடிடி - டிக்கெட் கட்டணம்: திரையரங்குகள் காலியாக இருக்க உண்மையான காரணம் என்ன?

சமீப காலமாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே திரையரங்குகள் தொடர்ந்து மூடப்படுவதும் அல்லது அவை திருமண மண்டபங்களாக மாற்றப்படுவதும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஓடிடி தளங்களின் வரவு காரணமாக திரையரங்குகளுக்கு மக்கள் அதிகமாக வருவதில்லை என்றும், இதனால் ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் அவை மூடப்படுவதாகவும் திரையரங்கு உரிமையாளர் சங்கம் தொடர்ந்து கூறி வருகிறது.
அதே நேரத்தில் திரையரங்கு டிக்கெட் கட்டணம், சிற்றுண்டி கட்டணம், பார்க்கிங் கட்டணம் போன்றவற்றை கணக்கில் கொள்ளும் மக்கள் ஓடிடி தளத்தில் திரைப்படங்கள் பார்ப்பதை விரும்புகிறார்கள் என்ற விமர்சகர்களின் வாதமும் ஒரு பக்கம் இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா, சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்கு டிக்கெட் விலையைக் குறைக்குமாறு திரையரங்க உரிமையாளர் சங்கத்திடம் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், திரையரங்க மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.